தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Monday 21 September 2015

‎எலும்பு_முறிவு_தைலம்‬


சிரு செருப்படி பெரு செருப்படை தேள் கொடுக்கு வெள்ளைப்பூ வட்ட கிலுகிலுப்பை துளசி கருந்துளசி ஊமத்தை இவ்விலைகளின் சாறுகள் ஆல் ஆரசு இச்சி பாலை மருதோன்றி முருங்கை கல்லிச்சி மைக்கொன்றை பொன்முருங்கை பூதகரப்பான் நற்ச்சங்கன் வேர் இவற்றின் பட்டைகளின் கியாழம் விளக்கெண்ணை இலுப்பெண்ணை புங்கயெண்ணை நல்லெண்ணை வேப்பெண்ணை ஆகியன சரி அளவு கூட்டி அதில் காசுக்கட்டி களிப்பாக்கு இலவங்கம் இவற்றில் துளையிட்டு மூனறு நாள் ஊறிய பின் டுப்பேற்றி கடுகு திரள் பதத்தில் காய்ச்சி வடிக்கவும் இதனை வெள்ளை துணியில் நனைத்து மேலே போட்டு நெ்நீர் விட்டு உருவி விட முறிந்த எலும்புகள் பொருதிச்சேரும் மூழங்கால் வாதம் சூலை தீப்புண் முதலியன தீரும் _நன்றி
‪#‎மரு_சிவதாசு_7667337444‬

குஷ்டத்திற்கு_மருந்து‬‪--‎மஞ்சிஷ்டாதி_கியாழம்‬


மஞ்சிஷ்டி வேப்பன் ஈர்க்கு ரகத சந்தனம் கோரைக்கிழங்கு சீந்தில் கொடி தும்மட்டி ஆடாதொடை கொத்துப்புங்கன் சிவதை துண்டிகம் மஞ்சள்மரமஞ்சள் நிலவேம்பு வட்ட திருப்பி திவிடையம் கருங்காளி திரிபலை பேய்புடல் கடுகு ரோகனி வாய்விளங்கம் பற்பாடகம் வசம்பு கார் போக அரிசி வெட்பாலை இவைகளை சமஎடை எடுத்து கியாழம் வைத்து குடித்தால் நமைச்சல் மண்டல குட்டம் கிடிப குஷ்டம் பாமா குஷ்டம் விசர்சினை குஷ்டம் விரணம் சித்தம குஷ்டம் சிவித்தர குஷ்டம் அசல குஷ்டம் சப்ததாதுக குஷ்டம் மற்றும் கிருமிகளினால் உண்டான சரும ரேகங்கள் நீங்கி மனமதனைப்பாலிருப்பான்
‪#‎மரு_சிவதாசு_7667337444‬
பாரம்பரிய மருத்துவர் மரு.சிவதாசு's photo.

Sunday 20 September 2015

உடனடியாக சர்கரையின் அளவு ரத்தத்தில் குறைய!!!


நூல்கோல் சாறு எடுத்து 150 மில்லி உடன் ஆவாரம் பூ ஒரு ஸ்பூன் சாறு
சேர்த்து காலையில் சாப்பிட்டால் சர்க்கரை அளவு ...உடனே குறையும் .
சாப்பிடும் முன்பு சர்க்கரை அளவு பரிசோதனை செய்து விட்டு சாப்பிட ஆரம்பிக்கவும் .

15 நாளுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் போதும் ,பரிசோதனையில் முடிவை பொறுத்து மறுமுறை சாப்பிடவும்

Saturday 19 September 2015

எளிய மருத்துவம்




வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.
கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.
டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.
தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.
வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.
ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.
கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.
கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.
குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.
தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.
ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.
தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.
பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.
வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.
காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.
கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.
காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)
காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.
பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.
வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.

Friday 18 September 2015

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்






உடல் சக்தி பெற:
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.


 வெட்டுக்காயம் குணமாக:
நாயுருவி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

உடல் அரிப்பு குணம் பெற:
வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு நன்கு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு படிப்படியாக நீங்கும்.

காதில் சீழ்வடிதல் குணமாக:
வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சீசாவில் பத்திரப்படுத்தவும். இதை காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

இரத்த சோகையை போக்க:
பீர்க்கங்காய் மற்றும் அதன் கொடியின் வேரை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கும்

Wednesday 16 September 2015

கண் நோய்களை தீர்க்க பாட்டி வைத்தியம்

மனிதர்களின் முக்கிய உறுப்பான கண் மிகவும் மென்மையான உறுப்பாகும். சிலருக்கு பிறவியிலேயே கண் தெரியாமல் இருக்கும். சிலருக்கு விபத்துகள் மற்றும் இதர காரணங்களால் கண்கள் பாதிக்கப்பட்டு பார்வையிழக்கும் அபாயம் ஏற்படுகின்றது. மாறிவரும் நவீன உலகில் நமது உடலின் பிற உறுப்புகளைப்போல் கண்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. நச்சுப் புகை, கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, செல்போன்களில் படம் பார்த்தல், அதிக வெளிச்சத்தை உமிழும் விளக்குகள், லேசர் விளக்குகள், அதிக வெளிச்சத்துடன் மிளிரும் கண்கவர் பட்டாசுகள் என கண்களை பாதிக்கும் விஷயங்கள் அதிகம் உள்ளன. எனவே கண்கள் பலம் பெற கீரை, மீன் போன்ற சத்தான உணவுகள் உட்கொள்வதுடன் கண் நோய்கள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆயுர்வேதம் மற்றும் வீட்டு வைத்திய முறையில் கண் நோய்களை தடுப்பது பற்றி பார்ப்போம்.
கண்வலி
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி நோய் தாக்கும். இது தொற்று நோய் வகையை சேர்ந்தது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பீளையில் அமர்ந்த ஈ மற்றவரின் கண்களில் அமரும்போது மற்றவர்களுக்கும் நோய் பரவும். இந்நோய்க்கு ஒரு வகை வெண்நிற கிருமிகளே காரணம். மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் அதில் கணக்கற்ற கிருமிகள் இருப்பதை காணலாம். கண்கை தேடி வருவது சிறிய வகை ஈக்கள். கசகசா விதையைவிட சற்று பருமனாக கருநிறத்தில் இருக்கும். இவைகள் கண்களில்தான் அமரும்.இவற்றை அதிகளவில் பார்க்க முடியாது. ஒரு சில சமயம்தான் கண் அருகே வரும். பெரியவர்கள் இந்த ஈக்களை விரட்டி விடுவர். பெரும்பாலும் சிறியவர்களையே இந்த ஈக்கள் மொய்ப்பதால் சிறியவர்களுக்கே இந்நோய் பாதிப்பு அதிகம். இந்நோய் தொடங்கும்போது கண்ணில் லேசான அரிப்பும், பின்னர் உறுத்தலும் உண்டாகும். 3 நாட்களில் கண்கள் சிவந்து பீளை கட்ட ஆரம்பிக்கும். 5 அல்லது 6 நாட்களில் கண் சிவந்து மண் கொட்டியது போன்ற உறுத்தல் இருக்கும். பகலை விட இரவில் அதிக உறுத்தலும், கடுப்பும் இருக்கும். கண்விழி சிவந்து காணப்படும். கண்களில் பீளைத் தள்ளும். 8 அல்லது 9 நாட்களில் குணமாகி விடும். எனினும் இந்நோயின் தாக்கத்தை குறைப்பது பற்றி பார்ப்போம்.இந்நோய் தொடக்கத்தில், பீளையை அழுக்கடைந்த துணியைக் கொண்டு துடைக்கக் கூடாது. மெல்லிய சுத்தமான துணியை கைக்குட்டை அளவு கிழித்து மஞ்சள் நீரில் நனைத்து உலர வைத்து துடைக்க வேண்டும். அழுக்கான துணி என்றால் கொதிக்கும் வெந்நீரில் போட்டு கசக்கி சுத்தம் செய்து மறுபடியும் மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்தி பயன்படுத்த வேண்டும். இதனை மற்றவர்கள் எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது. *எந்த வகையான நுண்ணிய விஷக் கிருமிகளையும் அழிக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. அது பீளையில் உள்ள லட்சக்கணக்கான கிருமிகளை உடன் அழிக்கும்.
* இரவில் பீளை சேர்ந்து இமைகள் ஒட்டிக்கொள்ளும். இதனால் கூடுதல் வலி ஏற்படும். எனவே காலையில் மிதமான சூட்டில் வெந்நீரில் சிறிது போரிக்பவுடரை கலந்து சுத்தமான பஞ்சினால் நனைத்து சுத்தம் செய்யலாம். ஒருமுறை நீரில் நனைத்த பஞ்சை மறுமுறை நனைக்க கூடாது.
* வெந்நீரில் சுத்தம் செய்தபின் 5 நெல்லிக்காயை உடைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் வைத்திருந்து அந்த தண்ணீரைக் கொண்டு கண்களை காலை மாலை சுத்தம் செய்தால் சீக்கிரமே கண்வலி குணமாகும்.

கண் எரிச்சல் சரியாக
சிலருக்கு கண்ணில் அடிக்கடி எரிச்சல் ஏற்படும். சிலருக்கு வெண்நிற பீளை சேரும். துடைக்க துடைக்க பீளை சேரும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் இவ்வாறு காணப்படும். இதற்கு நெல்லிக்காய் தூள், கடுக்காய் தூள், தான்றிக்காய் தூள் இவைகளை வகைக்கு 8 கிராம் வீதம் எடுத்து ஒன்றாக கலந்து அதில் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து அதே அளவு சுத்தமான பசு நெய்யில் விட்டுக் குழப்பி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு சிறிதளவு வெந்நீர் குடித்து வந்தால் பூரண குணம் கிடைக்கும். இவ்வாறு 21 நாட்கள் சாப்பிட வேண்டும். இந்த மருந்தை உட்கொள்ளும் போது,அதிக காரம், புளிப்பு, சேர்க்க கூடாது. காரத்திற்கு மிளகும், புளிப்பிற்கு எலுமிச்சையும் எடுக்கலாம்.

கண் பார்வை தெளிவடைய
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிலருக்கு கண் பார்வை தெளிவில்லாமல் மங்கலாக இருக்கும். இதற்கு கண் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகிறது. நாளுக்கு நாள் அதன் பவர் அதிகரிக்கும். ஆனால் கண்ணாடி அணியாமல் பணச்செலவின்றி பாட்டி வைத்தியம் கை கொடுக்கிறது. இதற்கு நெல்லிக்காய் அருமருந்தாகிறது. நன்றாக பழுத்த நெல்லிக்காயை தண்ணீரில் கழுவி கனத்த ஊசியை கொண்டு அடுத்தடுத்து இரண்டு மூன்று இடங்களில் குத்திவிட்டால் அதிலிருந்து சாறு வெளியேறும். இந்த சாற்றை ஒரு கண்ணுக்கு இரண்டு துளிகள் வீதம் இரு கண்களுக்கும் விட வேண்டும். காலை மாலை இருவேளையாக 21 தினங்கள் தொடர்ந்து விட்டு வந்தால் பார்வை தெளிவடையும். 7 நாளில் மங்கல் விலகும். 21 நாட்களில் பூரண நலம் கிடைக்கும்.

கண் சிவப்பு குணமாக
சிலருக்கு கண் எப்போதும் சிவந்து காணப்படும். கண்ணில் அடிப்பட்டாலும் கண் சிவக்கும். இதற்கு, நெல்லி விதை 16 கிராம், ஆல்பக்கோடா பழம் 32 கிராம், கடுக்காய் 48 கிராம் வீதம் சேகரிக்க வேண்டும். இதில் கடுக்காயை உடைத்து விதையை எடுத்து விட வேண்டும்.ஆல்பகோடா பழத்தின் விதையை எடுத்து உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை மருந்துடன் சேர்த்து எல்லாவற்றையும் அம்மியில் வைத்து தேன்விட்டு மைபோல அரைக்க வேண்டும். இதனை பாட்டிலில் சேகரித்து வைத்து காலை மாலை அரை தேக்கரண்டி குடித்து வந்தால் கண் சிகப்பு மாறும். குணமானதும் நிறுத்தி விடலாம்.

மாலைக்கண் சரியாக
வயோதிகம் காரணமாக சிலருக்கு பொழுது மங்கிய உடன் கண் தெரியாது. இதனை மாலைக்கண் என்பார்கள். இதற்கு நெல்லிக்காய் தூளில் தேக்கரண்டி எடுத்து அதே அளவு தேனும் சேர்த்து இரவு ஆகாரத்திற்கு பின் அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர பார்வை தெளிவடையும். - 

Tuesday 8 September 2015

புழுத்தொல்லை

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.
* தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும்... கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு,
* வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல்,
* சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன.
* அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.
* அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன.
* நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன.
* இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போ ன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன.
* யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.
* புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.

Sunday 6 September 2015

மூல நோய் விரட்ட


சித்தர்கள் - Tamil Scientists's photo.

# வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா... பனைவெல்லம...் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும்.
தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும்.
மூல நோய் பாதித்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் மருத்துவர் சசிக்குமார்.
கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக மாறலாம் என்றும் எச்சரிக்கிறார். அவர் கூறியதாவது: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் தடிமன் ஆவதுதான் மூலமாக உருவெடுக்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும்.
அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம்.
மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலப் பிரச்னையை உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும். ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும்.
முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லையென்றால் மீண்டும் வளர்ந்து மிரட்டும்.
முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இதில் ஏற்படும் கொப்பளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.
# பாதுகாப்பு முறை:
நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது. குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. கேரட் ஜூஸ் தினமும் குடிப்பது நல்ல பலனைத் தரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாறு குடித்தால் ஓரளவு தீர்வு காணலாம். அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது வலி குறையும்.
# ரெசிபி
@ கருணைக்கிழங்கு குழம்பு:
கருணைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு உரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். வேக வைத்த கருணைக்கிழங்கை உதிர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கவும். மூலத்தால் உண்டாகும் புண்களை கருணைக் கிழங்கு குணப்படுத்தும்.
@ வெந்தயக் கீரை கட்லட்:
கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து நெய்யில் வதக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ரொட்டித்தூள், வதக்கிய வெந்தயக் கீரை, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உலர்வாக பிசைந்து கொள்ளவும். இதை வடை போல தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் வார்த்து வேக வைத்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது.
@ பூண்டு சாதம்:
பூண்டு 100 கிராம் அளவுக்கு எடுத்து உரித்து பொடியாக நறுக்கவும். இதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை தனியாக உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இத்துடன் வதக்கிய பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த பாசுமதி அரிசி சாதத்தையும் சேர்த்துக் கிளறவும். பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
# டயட்
# உணவுதான் மூலத்துக்கு தீர்வு. தினமும் இரண்டு வேளை உணவில் கீரை சேர்க்க வேண்டும்.
# முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம்.
# அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
# இரவு நேரத்தில் பூண்டை உரித்து பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம்.
# தினமும் பூண்டு பால் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
# வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்க்க வேண்டும்.
# கத்தரிக்காய், தேங்காய், கருவாடு மசாலா உணவுகள் தவிர்க்கவும்.
# சில்லி சிக்கன், சில்லி மீன் என எண்ணெயில் பொரித்த, பொரிக்காத அசைவ வகைகள், முட்டை வேண்டாம்.
# சுத்த சைவமாக மாறிவிடுவது நல்லது. கீரைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.
பாட்டி வைத்தியம்
@அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது செருகி வைத்துக் கொண்டால் மூல வேதனை, வலி குறையும்.
@ அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.
@அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும்.
@அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
@ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும்.
@ ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும்.
@ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும்.
@அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.
@மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.
@ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
@இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம்.
@இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும்.
@இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில்  நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.

இத குடிச்சா தொப்பை குறையுமாம்



பானை போன்று வயிறு வீக்கி உள்ளதா? அதைக் குறைக்க தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருகிறீர்களா? அப்படியெனில் தினமும் உடற்பயிற்ச...ி செய்து வருதோடு, இரவில் படுக்கும் முன் ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தூங்கினால், தொப்பை விரைவில் குறையுமாம்.
ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்… அதிலும் இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை மற்றும் பல பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை குடித்துவிட்டு இரவில் தூங்கினால், சீக்கிரம் தொப்பை குறைவதைக் காணலாம். ஏனெனில் இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களில் உள்ள சக்தி வாய்ந்த மருத்து குணங்களால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் விரைவில் கரையுமாம்.
பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க… சரி, இப்போது தொப்பையைக் குறைக்க உதவும் அந்த பானத்தையும், அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் மருத்துவ குணங்களையும் காணலாம்.
வெள்ளரிக்காய் தொப்பையைக் குறைக்க வேண்டுமெனில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதிலும் ஒரு முழு வெள்ளரிக்காயில் 45 கலோரிகள் தான் உள்ளது. எனவே இதனை சாப்பிடுவதில் எவ்வித பிரச்சனையும் நேராது.
கொத்தமல்லியில் கலோரிகள் குறைவாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், அது உடலை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும்.
எலுமிச்சை எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கொழுப்புக்கள் உடலில் சேராமல் தடுப்பதோடு, தேங்கியுள்ள கொழுப்புக்கள் எளிதில் கரைந்து, நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றிவிடும்.
இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, மலச்சிக்கலைத் தடுத்து, கொழுப்புக்களை கரையும். எனவே உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள பொருள், கொழுப்புக்களை விரைவில் கரைத்து, தொப்பையைக் குறைக்க உதவும்.
கற்றாழை ஜூஸ் கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ ராடிக்கல்களின் வளர்ச்சியைக் குறைத்து, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, ஆற்றலை அதிகரித்து, தேங்கியுள்ள கொழுப்புக்களை கரையச் செய்யும்.
ஜூஸ் செய்முறை
வெள்ளரிக்காய் – 1
கொத்தமல்லி – 1 கட்டு
எலுமிச்சை – 1 துருவிய
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 டம்ளர் மேற்கூறிய பொருட்களை சாறு எடுத்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், தொப்பை குறைவதை நன்கு காணலாம்.