தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Monday 27 July 2015

"சுக்கில கட்டுக்கு"


சிலருக்கு போகத்தின் போது சீக்கிரமாக விந்து வெளிப்பட்டுவிடும் அதற்கு காரணம் விந்து நீர்த்துப்போவதே ,
நீர்த்துப்போன விந்து கெட்டியாக மாறுவதற்கு அனுபவ வைத்திய முறை
"கற்கண்டு தூள் 50 கிராம்,பொரித்தெடுத்த படிகாரத்தூள் 15 கிராம், இரண்டையும் நன்கு கலந்து வைத்துக்கொண்டு பத்து பங்காக பிரித்து காய்ச்சிய பசும்பாலில் தினம் ஒரு பங்கு சாப்பிட்டு வர சுக்கிலம் கெட்டியாகும் .
நன்றி வர்மக்கலை ஆசான் எஸ்.கோபாலகிருஷ்ணன் 9894285755

Sunday 26 July 2015

மூக்கில் ரத்தம் வடிவது ஏன்? - தெரிந்துகொள்வோம்


L Karthikeyan's photo.

மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவதுண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்தத் தொல்லை அதிகமாகக் காணப்படும். இதை ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்' (Epistaxis ) என்று அழைக்கிறார்கள்.
மூக்கு ஒரு தொட்டாற்சிணுங்கி!
சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.
மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. வெளிப் பக்கம் தெரிகிற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. இந்தப் புறநாசித் துவாரத்தில் விரல் விட்டால் குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா? அந்தப் பகுதிக்கு ‘மூக்குப் பெட்டகம்' (Nasal box) என்று பெயர். இதன் ஆரம்பப் பகுதியில், முகத்தின் பல பகுதிகளிலிருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன.
இப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா ' (Little’s area) என்று பெயர். இது ஒரு தொட்டாற்சிணுங்கி பகுதி. இது லேசாகச் சீண்டப்பட்டால்கூட, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிவிடும். இதை ‘சில்லுமூக்கு' என்று பொதுவாகச் சொல்வார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீதக் காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும்.
என்ன காரணம்?
குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பல்பம், பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்துக் குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்தக் கசிவு ஏற்படும்.
சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கிலிருந்து ரத்தம் வடியும். அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கைப் பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தம் வரலாம்.
மூக்கில் சதை வளர்ச்சி!
குழந்தைகளுக்கு மூக்கில் ‘நீர்க்கோப்புச் சதை' (Nasal Polyp) வளர்வதுண்டு. தவிர, மூக்கும் தொண்டையும் இணைகிற பகுதியில் ‘அண்ணச்சதை' (Adenoid) வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக்கொள்ளும். அடைப்பை விலக்கக் குழந்தைகள் அடிக்கடி மூக்கைக் குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும்.
வினையாகும் விளையாட்டு!
குழந்தைகள் விளையாட்டாகக் குச்சி, பேப்பர் துண்டு, ரப்பர் துண்டு, பல்பம், பஞ்சு, பயறு, பொத்தான், நிலக் கடலை, பருத்தி விதை, ஆமணக்கு விதை, வேப்பமுத்து, பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை மூக்கில் திணித்துக் கொள்வார்கள். இவை மூக்கினுள்ளே ஊறி, புடைத்து, புண் ஏற்படுத்தும். அப்போது அப்புண்ணிலிருந்து ரத்தம் கசியும்.
வெப்பச் சூழல்!
படிக்கிற இடம், வேலை செய்கிற இடம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நிலவுகிற தட்பவெப்பம் காரணமாகவும் மூக்கிலிருந்து ரத்தம் வடியும். மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது; மிகுந்த வெப்பமும் ஆகாது. குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றைச் சுவாசித்தால், மூக்கில் ரத்தம் வடியும்.
கோடையில் வெப்பம் மிகுந்த காற்றைச் சுவாசிக்க நேரிட்டாலும் இதே பிரச்சினைதான். மூக்கின் உட்பகுதிகள் இந்த வெப்பத்தால் உலர்ந்து, அங்குள்ள சவ்வுகளில் விரிசல் ஏற்படும். இதன் காரணமாக மூக்கில் ரத்தம் வடியும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட பள்ளி அறைகளில் படிக்கிற குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக, மூக்கில் ரத்தம் வடியும் வாய்ப்பு அதிகம்.
நோய்களும் காரணமாகலாம்!
ஒவ்வாமை, தடுமம், மூக்குச்சளி, மூக்குத்தண்டு வளைவு, காசநோய், கல்லீரல் நோய், தொழுநோய், இதயநோய், காளான்நோய், புற்றுநோய் கட்டி, ‘ஹீமோபிலியா' போன்ற ரத்த உறைதல் கோளாறுகள், சைனஸ் பிரச்சினை, டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைட்டமின் சி, கே சத்துக்குறைவு, ரத்தசோகை, பரம்பரை ரத்தக் கோளாறுகள், கபாலக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், மது அருந்துவது போன்ற காரணங்களாலும் மூக்கு வழியாக ரத்தம் வடியலாம்.
அடிக்கடி மூக்கில் ரத்தம் வடிபவர்களும், நடுத்தர வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மூக்கில் ரத்தம் வந்தால், `இது சாதாரண சில்லுமூக்குத் தொல்லைதான்’ என்று அலட்சியமாக இருக்காமல் காலத்தோடு மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
காரணம், இவர்களுக்குச் சாதாரணக் காரணங்களைவிட உயர் ரத்த அழுத்தம், ரத்தப் புற்றுநோய், புற்றுநோய் கட்டி ஆகிய மூன்று காரணங்களால் மூக்கில் ரத்தம் வடிவது உண்டு. இவற்றுக்கான முறையான சிகிச்சையை நோயின் ஆரம்ப நிலையிலேயே பெற்றுவிட்டால்தான், ஆரோக்கியத்துக்கு ஆபத்து வருவதும் தடுக்கப்படும்.
என்ன பரிசோதனை?
வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், மூக்குப் பகுதியை எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எண்டாஸ்கோப்பி எடுத்துப் பார்த்தால் மூக்கில் ரத்தம் வடிவதற்குக் காரணம் தெரிந்துவிடும். அதைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால், முழு நிவாரணம் கிடைக்கும்.
என்ன முதலுதவி செய்வது?
பாதிக்கப்பட்ட நபரை லேசாகத் தலையைக் குனிந்துகொண்டு உட்காரச் சொல்லுங்கள். வாயைத் திறந்து மூச்சுவிடச் சொல்லுங்கள்.
இப்போது மூக்கின் இரண்டு துவாரங்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பிடித்துக்கொள்ள, ரத்தம் வடிவது நின்றுவிடும்.
மூக்கைப் பிடித்திருப்பதால், வாய் வழியாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. பயப்பட வேண்டாம். வாயிலிருக்கும் ரத்தத்தைத் துப்பச் சொல்லுங்கள்.
இந்த முயற்சியில் ரத்தம் நிற்கவில்லை என்றால், குளிர்ந்த நீரில் பருத்தித் துணியை முக்கி எடுத்துப் பிழிந்துகொண்டு, மூக்கின்மேல் பத்து நிமிடம் வைக்கவும்.
ஐஸ் கட்டி கைவசமிருந்தால், அதையும் மூக்கின் மீதும் மூக்கின் இரண்டு பக்கங்களிலும் வைக்கலாம்.
பஞ்சு அல்லது சுத்தமான துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, திரி போல் செய்து, மூக்கினுள் அழுத்தமாகத் திணித்து, மூக்கை அடைக்கலாம்.
இத்தனை முயற்சிகளிலும் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்றால், அது மூக்கின் மேற்பகுதியிலிருந்துதான் வருகிறது என்று அர்த்தம். அதற்கு ரத்தக் குழாயைப் பொசுக்கி ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். இதற்கு மருத்துவர் உதவியை நாட வேண்டும்.
என்ன செய்யக் கூடாது?
மூக்கிலிருந்து ரத்தம் கசியும்போது எந்தக் காரணத்தைக்கொண்டும் மூக்கைச் சிந்தக்கூடாது.
விரலை நுழைத்து மூக்கை அடைக்கக் கூடாது.
மூக்கிலிருந்து ரத்தம் வடியும்போது, தலையை நிமிர்த்தக் கூடாது. காரணம், மூக்கிலிருந்து ரத்தம் தொண்டைக்குச் சென்று குமட்டலை ஏற்படுத்தும். வாந்தி வரலாம். சமயங்களில் புரையேறி, இருமல் வந்து சேரும்.
மருத்துவர் சொல்லாமல் எந்த ஒரு மூக்கு சொட்டு மருந்தையும் மூக்கில் விடாதீர்கள்.
தடுப்பது எப்படி?
குளிக்கும்போது தினமும் மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
தேவையில்லாமல் மூக்கைக் குடையும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
மூக்குக்குள் குச்சி, ரப்பர் போன்ற பொருட்களை நுழைத்து விளையாடக் கூடாது.
மிகவும் குளிர்ந்த நீரைக் குடிக்கக் கூடாது. மிகக் குளிர்ச்சியான உணவுப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது.
அதிக வெப்பச் சூழல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
ஒவ்வாமை நோய் உள்ளவர்கள், அதற்குரிய சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அடிக்கடி மூக்கடைப்பு ஏற்பட்டால், அலட்சியமாக இருக்கக் கூடாது. காரணம் அறிந்து, சிகிச்சை பெற வேண்டும்.
குளிர் காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, மருத்துவர் யோசனைப்படி மட்டும் மூக்கு சொட்டு மருந்து விடலாம்.
சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, சத்துக் குறைவு நோய்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் வடிந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளதா என்று சோதித்துக்கொள்ளவும். பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் உயர் ரத்தஅழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு.

நீர்ப்பிரமி கொடியின் மருத்துவ குணங்கள் :


ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.
.நீர்ப்பிரமி கொடி வகையைச் சார்ந்தது. நீர் நிலை ஓரங்களில் படர்ந்து வளரும். இதன் இலை பூண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன...் கொண்டது.
இது இனிப்பு, துவர்ப்புத் தன்மை கொண்டது. இந்தியா எங்கும் பரந்து காணப்படும். மலேசியா, இந்தோனேசியா, பர்மா, இலங்கை நாடுகளிலும் காணப்படுகிறது.
நீர் பிரம்மி செடியில், ஸ்டீரால் மற்றும் Herpestine, Brahmine என்னும் ஆல்கலாய்டுகளும், Bacoside A, Bacoside B ஆகிய குளுக்கோசைடுகளும் உள்ளன.
நினைவாற்றலைத் தூண்ட
பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதி ஒரு பெரும்பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஞாபக மறதி ஒரு தொற்று நோய்க்குச் சமமாகும். இதனை போக்கும் அருமருந்துதான் நீர்பிரம்மி. நீர்பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
நரம்புத் தளர்வு நீங்க
மூளையை தலைமையிடமாகக் கொண்டு உடலெங்கும் பின்னிப் பிணைந்து காணப்படும் நரம்புகள்தான் மனித செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாகின்றன. இந்த மெல்லிய நரம்புகளில் சில சமயங்களில் மன அழுத்தம், கோபம் காரணமாக அங்காங்கு நீர் கோர்த்துக்கொள்ளும். மேலும் வெப்பப் பகுதியில் வேலை செய்பவர்களின் நரம்புகளும் பாதிக்கப்படும். நரம்புகள் பலமாக இருந்தால்தான் உடல் புத்துணர்வுடன் செயல்படும். இத்தகைய நரம்பு தளர்வு நீங்க பிரம்மி இலைகளை உலர்த்தி கசாயம் செய்து அருந்திவருவது நல்லது.
சிறுநீர் பெருக
ஒரு மனிதன் ஆரோக்கியமாக செயல்பட அவன் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும். அதுபோல் அவன் தினமும் 1 லிட்டர் முதல் 1 1/2 லிட்டர் வரை சிறுநீரை வெளியேற்ற வேண்டும். சிறுநீர் சீராக வெளியேறினால் தான் உடலில் உள்ள தேவையற்ற பொருட்கள் வெளியேறும். இவை வெளியேறாமல் நின்றுவிட்டால் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு சிறுநீர் வெளியேறாமல் நீர் எரிச்சல் உண்டாகும். இவர்கள் நீர்ப்பிரம்மி இலைகளை கசாயம் செய்து அருந்தி வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
மலச்சிக்கல் நீங்க
மலச்சிக்கல், மனச்சிக்கல் ஆதி நோய்கள். மலச்சிக்கலைப் போக்கினாலே உடல் ஆரோக்கியம் பெறும். சிலருக்கு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு சாப்பிட்டாலும் மலம் எளிதில் வெளியேறாது.
இவர்கள் நீர்பிரம்மி இலைகளை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.
நீர்பிரம்மி இலைகளை சாறு பிழிந்து நெய் சேர்த்து காய்ச்சி கொடுத்து வருதல் நல்லது அல்லது நீர்பிரம்மி சாறுடன் 8 கிராம் கோஷ்டத்தை பொடித்து சேர்த்து தேன் கலந்து கொடுத்து வந்தால் புளிச்ச ஏப்பம் நீங்கும்.
நல்ல குரல்வளம் கிடைக்க
நீர்பிரம்மி இலைகளை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கம்மல் தீருவதுடன் நல்ல குரல்வளம் கிடைக்கும்.
உச்சரிப்பு சரிவராத குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். இதன் வேரை அரைத்துக் கொதிக்க வைத்து நெஞ்சில் பூச கோழைக்கட்டு நீங்கும்.
நீர்பிரம்மி இலைகளை சிற்றாமணக் கெண்ணெய் விட்டு வதக்கி, வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு அதையே அவ்வீக்கங்களின் மீது வைத்துக் கட்டிவர வீக்கங்கள் கரையும்

Wednesday 22 July 2015

Endometriosis

Baskar Jayaraman's photo.

Endometriosis. உலகில் ஆறில் ஒரு பெண்ணிற்கு வரும் நோய். இதை தடுக்க தீர்க்க வழிகள்.
Endometriosis. இதற்க்கு எவ்வளவு பேருக்கு அர்த்தம் தெரியும். இதை தமிழில். இடம...கல் கருப்பை அகப்படலம் என்று சொல்வார்கள். கருப்பை என்னும் வார்த்தை மட்டும் புரியர்து. மத்தது புரியலை என்று சொல்கிறிர்களா. இந்த பெயர் வேண்டுமானால் உங்களில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால். உலகில் ஆறு பெண்களில் ஒருவருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. நீங்களும் அந்த ஆறில் ஒருவராக இருந்தால்? Endometriosis பிரச்சனைக்கான அறிகுறிகள், தீர்வுகளை பாப்போம்.
Endometriosis என்றால் என்ன? அதன் அறிகுறிகள்.
பெண்மணிகளுக்கு கருப்பையின் வெளியே இருக்கும் ஒரு Tissue தான் Endometriosis. அது சற்று அப் நார்மல்லாக அதிகம் ஆகுதல், குறைதல். கருப்பையின் வெளியே உள்ள அது. உள்ளே வருதல் போன்றவைகள் நிகழ்ந்தால். அதன் அறிகுறியாக முதலில் உயிர் போகும் அளவு இடுப்பு வலி வரும். பின்னர் வயிற்று வலி.
யூட்ரச் பிரச்சனை என்று முதலிலேயே சொல்லியிருக்கலாமே. எதற்க்கு சுத்தி வளைச்சி. Endometriosis, இடமகல்னுலாம் சொல்லி குழப்பனும் என்று நீங்கள் நினைக்கலாம். Endometriosis என்பது. யூட்ரச்சில் உள்ள. Fallopian Tube, Cervix, Vaginia, Ovary போல். Endometriosis சும் ஒரு பகுதி. அவ்வளவே.
ஆனால்? யூட்ரஸ்சில் ஏற்ப்படும் பிரச்சனைகளுக்கு இந்த Endometriosis தான் முக்கிய மூல காரணம். இந்த பிரச்சனை உள்ள ஒரு பெண். மருத்துவரிடம் சென்று சோதனை செய்தால். அவர். உங்களுக்கு யூட்ரஸ்சில் பிரச்சனை என்று தான் சொல்லுவாரே ஒழிய. Endometriosis என்று சொல்ல மாட்டார். காரணம். அவ்வாறு மருத்துவர். Endometriosis என்று சொன்னால். அதை கேட்கும் பெண். நமக்கு ஏதோ? புது வித நோய் வந்து இருக்கிறதோ என்று குழம்புவார். Endometriosis னா என்னனு. டாக்டர்ரிடம். சம்பந்தபட்ட பெண் கேள்வி கேட்பார். அவர் விளாவரியாக. அந்த பெண்ணிற்க்கு புரியும்படி விளக்க வேண்டியதாக இருக்கும். அதனால். வெறும்ன உங்களுக்கு யூட்ரச் பிரச்சனை என்று மருத்துவர் சொல்லி விடுவார்.
உங்களுக்கு அடிக்கடி. முதலில் இடுப்பு வலி வந்து. அடுத்து வயிறு வலி வந்தால். உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்து. உங்களுக்கு வெறும் சாதாரண வலி தான் என்று மருத்துவர் சொன்னால் சந்தோசம். அவ்வாறு இல்லாமல். உங்களுக்கு யூட்ரச் பிரச்சனை என்று மருத்துவர் சொன்னால். Endometrirosis மூலம் வரும் பிரச்சனையா என்று மருத்துவரிடம் கேளுங்கள். அவர் சில நொடிகள் உங்களை ஆச்சர்யமாக பார்ப்பார்.
இதை முற்ற விட்டால். மிக ஆபத்து. காரணம். முற்ற விட்டால். புற்று நோய் வரும்.
So. Prevention Is Better Than Cure. வரும் முன்னே காப்பது சிறந்து.
எனக்கு தெரிந்து. இந்த பிரச்சனை ஆங்கில மருத்துவத்தின் மூலம் முழுமையாக தீர்க்க முடியாது.
இதற்க்கு என்றே உள்ள சில பெயின் கில்லர் மாத்திரைகள் வலியை கட்டுபடுத்தும். அனால் Endometriosis பிரச்சனைக்கு ஒரு எண்டு. அதன்மூலம் கிடைக்காது. இதர்க்கு ஆங்கில மருத்துவம் தரும் ஒரே ஒரு தீர்வு. யூட்ரஸ் உறுப்பையே அறுவை சிகிச்சை செய்து வெட்டி விடுவது தான்.
எனக்கு தெரிந்த ஒரு அம்மையார். மிகவும் முத்திய நிலையில் மருத்துவரிடம் பரிசோதனை செய்தார். அந்த அம்மாவிற்க்கு Endometriosis இருப்பது உறுதி செய்யப்பட்டது. நல்லவேளை. அவருக்கு cancer இல்லை. ஆனால். அந்த அம்மாவின் உயிரை காப்பாற்ற. கருப்பை. அறுவை சிகிச்சையின் மூலம் வெட்டி அகற்றப்பட்டது. அதன் மூலம். 35 வயதிலேயே 75 வயது போல் அவரின் உடல் பலவீனம் அடைந்தது.
இந்த Endometriosis நோய்க்கான இயற்க்கை நிவாரணங்களை பாப்போம்.
Folic Acid அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். பச்சை காய் கறிகளில் இந்த போலிக் ஆசிட் இருக்கும். குறிப்பாக கீரையில் அதிக அளவில்.
விட்டமின் C, D அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
தேனில் ஊற வெய்த்த. நெல்லிக்கனி ஒன்று, இரண்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது. இதற்க்கு மிக சிறந்த மருத்துவம் ஆகும். தேனில் இன்று நிறைய கலப்பட வகைகள் இருப்பது வேதனையான விஷயம். காதி என்றால் நம்பி வாங்கலாம். அணைத்து காதி கிளைகளிலும் தேனில் ஊர வெய்த்த நெல்லிக்கனியை கண்ணாடி குடுவைகளில் போட்டு விற்ப்பார்கள்.
முள்ளங்கியை வேக வெய்த்து அதன் நீரை தினமும் அருந்தி வந்தால். Endometriosis சில் உள்ள அணைத்து குறைபாடுகளையும் இது சரி செய்து விடும். கருப்பை பிரச்சனைக்கு. நமது நாட்டு சித்தர்கள் பரிந்துரைத்த மிக சிறந்த தீர்வு. சீனாவில் பெண்கள். [அந்த அரசின் லூசு தனமான சட்டங்களால் இன்று பெண்களே அந்த நாட்டில் ஒரு அறிய வகை உயிரினம்] ஆனால் காலம் காலமாக. அங்கு பெண்மணிகள் Endometriosis மூலம் வரும் பிரச்சனைகளுக்கு முள்ளங்கி மூலம் தீர்வை கண்டனர். சீனர்களின் பிரதான உணவுகளில் முள்ளங்கியும் ஒன்று.
Endometriosis பிரச்சனை வந்தால் தான். தேனில் ஊர வெய்த்த நெல்லிகாயும், முள்ளங்கியும் உன்ன வேண்டும் என்று இல்லை. பல மருத்துவ, மகத்துவ குணங்கள். தேன், நெல்லிக்காய், முள்ளங்கியில் அடங்கியுள்ளது. இதை தினமும் உண்டால். Endometriosis பிரச்சனை வரவே வராது. தினமும் இவற்றை உண்ணுங்கள் ஆரோக்யமாக வாழுங்கள். Endometriosis பிரச்சனையை. ரொம்ப முத்த விட்டால். கருப்பையை அறுப்பதை தவிர வேறு வழி இல்லை.

வெண்படையைப் போக்கும் அருமையான மருந்து!!!


Baskar Jayaraman's photo.
Baskar Jayaraman's photo.
Baskar Jayaraman's photo.
.வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா (Luecoderma) எனப்படு...கிறது. மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூக ரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.
* கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம் * கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை வடிகட்டி, இத்துடன்* வெந்தயப் பொடி- 80 கிராம்
கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும். இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை உணவுக்கு முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.
மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்.

Friday 17 July 2015

மூல நோய் விரட்ட!!!


ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளிவரு வதைத்தான் மூலநோய் என்கிறார்கள்.
மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும்போது, மலம் வெளியேறாமல் உள்ளுக் குள்ளேயே நின்று இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற முற்படும்போது மலவாய்க் குடலில் இருந்து சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியே தள்ளிக்கொண்டு வந்து விடுகின்றன.
தவிர, காய்ந்த மலம் ஆசனவாயைக் கிழிப்பதால் ரத்தம் பீறிட்டு வெளியே வரும். ஒவ்வொரு நாளும் இதே மாதிரி மலம் கழிக்கும்போது அந்த வாய்ப் பிளந்து கொள்ளும். இதை பிஸ்ஸர் அல்லது ஆசனவாய் வெடிப்பு என்கிறார்கள்.
இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ மூலங்கள் உண்டாகின்றன.
ஆங்கில வைத்தியத்தில் இதை முதல் டிகிரி, இரண்டாவது டிகிரி, மூன்றாவது மற்றும் நான்காவது டிகிரி என நான்கு வகைகளாகப் பிரிப்பார்கள். ஆனால் நமது தமிழ் முன்னோர்கள் இதை இருபத்தோரு வகைகளாகப் பிரித்தார்கள்.
அவை:
நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று மூலம், வரண் மூலம், ரத்த மூலம், வினைமூலம், மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்திமூலம், சூத மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாத மூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம் மற்றும் கவ்வு மூலம்.
இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை என்பதால் இவற்றை நவமூலம் என்றும் சொன்னார்கள்.
நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை குணப்படுத்தும் பல அரிய மூலிகைகளை ஓலைச் சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள்.
அதனடிப்படையில் மூலநோய்க்கு பிரத்யேகமான மூலிகை மருந்துகள் தயாரிக்கப்பட்டு அளிக்கும்போது பக்க விளைவுகள் இல்லாமல் மூலநோய் குணமாகும்.
ஒரு மண்டலம் சாப்பிடும் மருந்துகளும் உள்ளன, ஒரே வாரத்தில் குணமாகும் மருந்துகளும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன.
இதனால் உள் மூலம் குணமாகும், வெளிமூலம் சுருங்குகிறது. ஆசனவாயில் இருக்கும் சீழ்க்கட்டிகள் உடைந்து ஆற்றப்படுகின்றன. மல ஜலம் சுலபமான முறையில் வெளியேறுகிறது. மீண்டும் வருவதில்லை.
உதாரணத்திற்கு ஒரு மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
துத்திக் கீரை என்ற ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக் கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் தலைக் காட்டாது. எத்தகைய மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலைமீது விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டிவிட, கட்டி உடைந்துவிடும். மூல முனைகள் உள்ளுக்குச் சென்றுவிடும். வேண்டுமானால் நீங்கள் கூட செய்து பார்க்கலாம்.
துத்திக்கீரயின் மற்ற பயன்கள்:
இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.
மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ் சாலவதக் கிக்கட்டத் தையலே - மேலுமதை எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும் இப்படியிற் றுத்தி யிலையை (அகத்தியர் குணபாடம்)
மலச்சிக்கல் தீர
மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.
மூல வியாதி குணமாக
காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது.
இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.
உடல் சூடு தணிய
துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.
வெப்பக்கட்டி குணமாக
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.
துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
பல்ஈறு நோய் குணமாக
துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.
குடல் புண் ஆற
துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.
சிறுநீர் பெருக்கி
சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.
துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.
மூல நோய் விரட்ட02
எல்லாவகை மூல நோய்களுக்கும் பக்குவமான மருந்து இது. கிராமங்களில் கிடைக்கும் மருந்து.அதுதான் வேப்பமுத்து. அதன் பருப்பை நன்றாக அரைக்க வேண்டும். ஒரு பாக்கின் அளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மாலையிலும் ஒரு பாக்கு அளவு அரைத்து உருட்டிச் சாப்பிட வேண்டும். இப்படியே (ஒரு மண்டலம்) நாப்பத்தெட்டு நாள் சாப்பிடணும். பத்தியம் உண்டு. அதாவது,மூல வியாதிக்கு மருந்து சாப்பிட்டு முடியும் வரை,உடல் உறவு கூடாது.சூடு உண்டாக்கி மூலம் அதிகமாகும். அருகம்புல் சாறு நல்லது.நாள்தோறும் அதிகாலையில் அரைக்கால் படிசாறு குடித்து வமவுனம் என்னும் மந்திரமொழி

சுளுக்கு


Wednesday 15 July 2015

குடல் புண்(Ulcer) பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !!!



இன்றைய பரபரப்பான உலகில் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றுதான் குடல் புண் நோய். இந்த நோயின் அறிகுறிகள், நோய் தாக்குவதற்கான காரணங்கள், குடல் புண்னின் வகைகள், நோயின் பாதிப்புகள் என்ன என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

குடல் புண்ணின்(Ulcer) அறிகுறிகள் : ...

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கும் குடல் புண் நோய் இருக்கலாம்.

குடல் புண்(Ulcer) என்றால் என்ன?

இரைப்பையும் சிறுகுடலும் இணைந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.

குடல் புண்(Ulcer) ஏற்படுவதற்கான காரணங்கள் :

குடல் புண் ஏற்படுவதற்கான தெளிவான காரணங்கள் இதுவரை வரையறுக்க படவில்லை என்றாலும், புகை பிடித்தல், புகையிலையை வாயில் போட்டு சுவைத்தல், மது அருந்துதல், மற்றும் சில வகை மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல்.

குடல் புண்(Ulcer) வகைகள் :

1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .

2) சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

குடல் புண்(Ulcer) இருப்பதை அறிந்து கொள்ளவது எப்படி ?

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.

வயிற்று பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.

சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.

ஒரு நபர் சாப்பிடும் அளவுக்கேற்ப இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

குடல் புண்ணுக்கு(Ulcer) மருத்துவம் செய்யாமல் விட்டால் :

குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால்

பாதிக்கப்படுகிறது. அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.

சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.இதுவும்அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது..

குடல் புண்ணுக்கு(Ulcer) மருத்துவம் :

குடல் புண்ணுக்கு மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும்.

குடல் புண்(Ulcer) உள்ளவர்கள் செய்ய வேண்டியவை :

1. குறைந்த உணவை அடிக்கடி சாப்பிட வேண்டும்

2. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

3. வாழைப் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.

4. தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

5. மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

6. இருக்கமாக உடை அணியக் கூடாது.

7. யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.

8. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

9. மருத்துவர் ஆலோசனையை பின்பற்ற வேண்டும்.

குடல் புண்(Ulcer)உள்ளவர்கள் செய்யக்கூடாதவை :

1. புகைபிடிக்கக் கூடாது.

2. மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.

3. அதிகமாகச் சாப்பிடக்கூடாது.

4. நடு இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

5. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

6. இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.

7. அவசரப்படக் கூடாது.

8. அதிகமாக கவலைப்படக் கூடாது.

எள்ளும் கொள்ளும்

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.


'இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு" என்பது பழமொழி. முதலில் எள்ளு பற்றிய விபரங்களை காண்போம். எள்ளு ஒரு சிறிய செடி. இந்தியாவில் பெருமளவி...ல் பயிரடப்படுகிறது. 1-2 அடி உயரமே வளரும் எள்ளுச் செடியின் ஆயுட்காலம் ஓராண்டு வரைதான்.
மூவகை வர்ணங்களைக் கொண்ட எள் வகைகள் உள்ளன. அவற்றில் கருப்பு நிறத்தைக் கொண்ட எள்ளில்தான் வெள்ளை மற்றும் செவ்வெள்ளை விட மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகின்றன. உணவாக அதன் எண்ணெய்யும் பயன்படுகிறது.
சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடிய இனிப்புடன், ஜீர்ண நிலையில் இனிப்பாக மாறும் தன்மையுடன் கூடியது. உடலுக்கு நெய்ப்பும் சூடும் தரக் கூடியது. உடலை கனக்கச் செய்யும். தோலுக்கும் பற்களுக்கும் கேசங்களுக்கும் உறுதி தரக்கூடியது. உறுப்புகளுக்குப் பலமும் சுறுசுறுப்பும் தரும். வேக்காளத்தைக் குறைத்து அசதியைப்போக்கித் தசைகளுக்குப் புத்துயிர் ஊட்ட வல்லது. மூளைக்குத் தெளிவைத் தரும். நல்ல பசியைத் தூண்டுவதால் உணவின் அளவு அதிகரித்து இளைத்தவன் புஷ்டியாகிறான். மலக்கட்டை ஏற்படுத்தும். வாயுவால் ஏற்படும் திமிர்ப்பு, விறைப்பு, வலி முதலியவைகளைக் குறைக்கும். பெண்களின் கர்ப்பப்பையைச் சார்ந்த வறட்சியைப் போக்கி வலியை கண்டிக்கக் கூடியது.
எள்ளை தூளாக்கி சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணை கலந்து சாப்பிட வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, குடல் வலி இவைகளைப் போக்கும். உடலுக்கு நல்ல தெம்பை தரக்கூடியது. வெல்லப்பாகுடன் இதைக்கூட்டி எள்ளுருண்டை, கொழுக்கட்டை முதலிய தின்பண்டங்களை சாப்பிடுவதால் தன்னலம் பாராமல் பிறர்க்காக உழைக்கும் மனப்பான்மை வளரும். மனவெறியை அடக்க வல்லது.
வாய்ப்புண்ணை ஆற்றுவதற்கு எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் வெகுநேரம் வைத்திருந்து குதப்பித் துப்ப வேண்டும். ரத்த மூலத்திலிருந்து ரத்தம் சொட்டுவதை நிறுத்த எள்ளை இடித்துத் தூளாக்கி வெண்ணெய்யுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும். மலம் சிக்கலில்லாமல் வெளியாகும். மூல வேதனை
பற்கள் எகிறுகள் தாடை இவைகளில் பலக்குறைவுள்ளவர் விதையை மென்று குதப்பிக் கொண்டிருப்பதாலும் நல்லெண்ணெய்யை வாயிலிட்டு குதப்பித் துப்புவதாலும் நன்மை பெறுகிறார்கள். மூளைக் களைப்புள்ளவர்கள் எள்ளை அதிகமாக உணவில் சேர்ப்பது நல்லது.
சிறுநீரை சுண்டச் செய்வதால் அதிக அளவில் சிறுநீர் வெளியாகும். நீரிழிவு நோயில் எள் கலந்த உணவு நன்மை தரும். பலத்தையும் தருகிறது. சிறுநீரில் சீழ் அதிக அளவில் வெயியாகும் நபர்களும் எள்ளை உணவில் அதிகமாகச் சேர்க்கலாம்.
வயது வந்தும் பூப்படையாத பெண்களும், மாத விடாய் சரியாக ஆகாமல் கடும் வயிற்று வலியால் அவதியுறும் பெண்களுக்கும், தாய்ப்பால் குறைவாக உள்ளவர்களுக்கும் எள்ளுடன் கூடிய உணவால் நன்மை பெறுவர். உதிரச் சிக்கலை போக்க எள் ஊற வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். பனை வெல்லம் எள்ளு கருஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திய வலி கடுப்பு உதிரச் சிக்கலை நீக்க பெறும் உதவி செய்கின்றன.
எள்ளின் எண்ணெய்யும் எள்ளைப் போல சிறந்தது. நல்லெண்ணெயை தேய்த்துக் குளிக்க சீக்கிரம் தோலின் வழியே ஊடுருவி கொழுப்பு வியர்வை பித்த கோளங்களின் அழற்சி அயர்வை போக்கி வியர்வையை சரியாக வெளியாக்கி, தசைகளில் தேவையற்ற மலப் பொருள்கள் தங்காமல் அகற்றி தசைகளுக்கு பலமும் தோலுக்கு மென்மையும் நிறத்தையும் மயிர்கால்களுக்குத் திடமும் கேசங்களுக்கு கருமையும் தருவதால் எண்ணெய் குளிக்கு மிகவும் சிறப்பானது. வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு என்ற பழமொழிக்கேற்ப எண்ணெய்க் குளி தவறாதவர்களை விட எண்ணெய் குளியைத் தவிர்த்தவர்களே அதிகம் டாக்டர்கள் வீட்டில் காணப்படுகின்றனர்.
கொள்ளு துவர்ப்புச் சுவை, இனிப்புச் சுவை, வறட்சி, உஷ்ண வீர்யம் இவைகளையுடையது. கொள்ளுக் கஞ்சியை அருந்துவதால் நாட்பட்ட ஜலதோஷம், மூச்சுத்திணறல், இருமல், மூலம், விக்கல், வயிற்று உப்புசம், கபவாயு, கல்லடைப்பு, போன்ற நோய்களும் வீக்கம் பெருவயிறு போன்ற உபாதைகளும் நீங்கி விடுகின்றன.
எளிதில் ஜீர்ணமாகும். மலத்தை கட்டும். உடலில் ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. ஜீர்ண நிலையில் புளிப்புச் சுவையையும், எரிச்சலையும் தருவது.
கொள்ளு தான்யத்தை நன்கு பொடித்து புளித்த மோரை சூடாக்கி அதில் குழைத்து கொழுப்பினால் உடல் பருத்த பகுதிகளில் மேலிருந்து கீழாக சூடு பறக்கத் தேய்த்து அரை மணிமுதல் ஒரு மணிநேரம் வரை ஊறி வெந்நீரில் குளிக்க சதை உருகி உடல் இளைத்துவிடும். உணவில் அதிகமாக இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையையும், புலால் உணவையும் தவிர்க்க வேண்டும். பகல் உறக்கத்தைத் தவிர்த்து உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும்.
உடலுக்கு சூட்டை அதிகப்படுத்துவதால் கொள்ளின் உபயோகத்தை அதிக அளவில் உள்ளுக்கு சாப்பிடுவதை விட வெளிப்புற உபயோகம் சிறந்த பலனைத்தரும்.

Sunday 12 July 2015

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்



ஹார்மோன் சமநிலையின்மையானது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி எந்த வயதிலும் ஏற்படும். இத்தகைய நிலைமை வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையானது பாதிக்கப்படும். அதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதில் முதலிடத்தில் இருக்கும் மன அழுத்தம் தான் முக்கியமானது. அதுமட்டுமின்றி, அதிகப்படியான மன அழுத்தத்துடனான வாழ்க்கை முறையை மேற்கொண்டால், ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தி, வாழ்க்கையையே பாழாக்கிவிடும்

இத்தகைய ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறான அறிகுறிகள் இருக்கும். அதில் பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகளாவன அதிகப்படியான இரத்தப் போக்குடன், எடை அதிகரித்தல், முகத்தில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பது போன்றவை. ஆண்களுக்கு என்றால் பாலுணர்ச்சி குறைவாகவும், விரக்தி, விந்தணுவின் உற்பத்தி குறைதல் மற்றும் பல உள்ளன. எனவே இத்தகைய பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டால், அவற்றை குணப்படுத்த ஒரு எளிமையான வழி உள்ளன. அது தான் உணவுகள்....

ஆம், உணவுகளின் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை குணப்படுத்தி சீராக வைக்க முடியும். மேலும் அத்துடன் லேசான உடற்பயிற்சி மற்றும் யோகாவை மேற்கொண்டால், நிச்சயம் ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்யலாம். சரி, இப்போது ஹார்மோன் சமநிலையின்மையை சீராக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளைப் பார்ப்போம்

தேங்காய் எண்ணெய்

ஹார்மோன் சமநிலையின்மையைப் போக்கும் உணவுப் பொருட்களில் முதன்மையானவை தான் தேங்காய் எண்ணெய். இத்தகைய தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை மட்டுமின்றி, உடல் எடையையும் சீராக வைத்துக் கொள்ளலாம்.

தண்ணீர்

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, மன அழுத்தமும் குறையும். இவ்வாறு மன அழுத்தம் குறைந்தால், ஹார்மோன் சமநிலையின்மையைப் போக்கலாம்

நட்ஸ்

நட்ஸில் புரோட்டீன் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஹார்மோன் பிரச்சனை இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு, அதனை சரிசெய்ய புரோட்டீன் உணவுகளானது மிகவும் இன்றியமையாதது.

காய்கறிகள்

ஹார்மோன் சமநிலையின்மையைப் போக்குவதற்கு காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அதிலும் பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பீன்ஸ போன்றவற்றில் ஹார்மோன் சமநிலையின்மையை சீராக வைத்துக் கொள்ள உதவும் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது.

கானாங்கெளுத்தி மீன்

கடல் உணவுகளில் கானாங்கெளுத்தி மீனை அதிகம் உணவில் சேர்த்தால், ஹார்மோன் பிரச்சனைகளை எளிதில் சரிசெய்யலாம்.

பூண்டு

உணவில் பூண்டுகளை அதிகம் சேர்ந்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை நீங்கி, சீராக இருக்கும். அதிலும் பூண்டை, பாலில் தட்டிப் போட்டு குடித்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை சீராகிவிடும்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அத்தகைய க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மையினால் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைத்து கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

தழும்புகள் மறைய செய்ய சூப்பர் டிப்ஸ்!


பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.
இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகை...யில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.
எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.
பாதாம் எண்ணெய்
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.
கற்றாழை
கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.
பால்
தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.
தக்காளி சாறு
தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.
அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.