தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Sunday 16 August 2015

தினமும் சிறிது துளசி இலைகளை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பெறும் நன்மைகள்!!!!


மூலிகைகளின் தாய் மற்றும் ராணி தான் துளசி. இந்த சிறு இலை பல மகிமைகளைச் செய்யும். அதிலும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் மூலிகைகளில் துளசியை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது. இதற்கு அதில் உள்ள சத்துக்கள் தான் காரணம். குறிப்பாக துளசியை உட்கொண்டு வந்தால், சுவாச கோளாறுகளைத் தடுக்கலாம்.
மேலும் துளசி இலை சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, நல்ல பொலிவான சருமத்தைப் பெற உதவும். இந்த துளசியானத...ு எண்ணெய் மற்றும் மாத்திரை வடிவங்களில் கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் இதன் இலைகளை பச்சையாக உட்கொண்டால், இதன் பலனை முழுமையாகப் பெறலாம்.
அதுவும் தினமும் காலையில் துளசி இலைகளை சிறிது உட்கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரைப் பருக வேண்டும். சரி, இப்போது தினமும் இப்படி துளசி இலைகளை உட்கொண்டால் என்ன பலன்களைப் பெறக்கூடும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
தலைவலி :-
அடிக்கடி தலைவலியை சந்திப்பவராயின், துளசி இலைகளை உட்கொண்டு வந்தால், அந்த தலைவலியில் இருந்து விடுபடலாம். துளசியில் உள்ள சக்தி வாய்ந்த இரத்தச் சேர்க்கை நீக்கும் பண்புகள் உள்ளதால், இவை தலைவலியைத் தடுக்கிறது. ஒற்றைத் தலைவலி, சைனஸ் மற்றும் மன அழுத்தத்தினால் தலைவலியை அனுபவித்தால், தினமும் துளசியை உட்கொண்டு வாருங்கள்.
காய்ச்சல் :-
தற்போது பலவகையான காய்ச்சல்கள் வருவதால், அவை எளிதில் மருந்து மாத்திரைகளால் போவதில்லை. ஆனால் இயற்கை வழிகளைப் பின்பற்றினால், உடலின் ஆற்றல் அதிகரிப்பதோடு, காய்ச்சலும் குறையும். அதுவும் காய்ச்சல் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு மூன்று முறை துளசி இலைகளை வாயில் போட்டு மெல்ல வேண்டும்.
நோய்த்தொற்றுகள் :-
உடலினுள் ஏதேனும் நோய்த்தொற்றுகள் இருந்தால், துளசி இலையை உட்கொண்டு வர, அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள், உடலினுள் உள்ள எந்த வகையான நோய்த்தொற்றுக்களையும் அழித்து வெளியேற்றிவிடும். முக்கியமாக சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.
சிறுநீரக கற்கள் :-
சிறுநீரக கற்கள் இருந்தால், துளசி இலைகளை உட்கொண்டு வாருங்கள். அதிலும் காலையில் முதல் வேளையாக துளசி இலைகளை சிறிது வாயில் போட்டு நன்கு மென்று அதன் சாற்றினை விழுங்குங்கள். இதனால் அந்த சாறு சிறுநீரக கற்களை கரைத்துவிடும்.
வாய் ஆரோக்கியம் :-
காலையில் பற்களை துலக்கியப் பின், சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு நன்கு மென்றால், ஈறுகளில் ஏதேனும் தொற்றுகள் இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டாலோ, அவை குணமாகும்.
சளி, இருமல் :-
தினமும் காலையில் துளசி இலையை உட்கொண்டவுடன் தண்ணீரை குடித்து வந்தால், அதில் உள்ள இருமல் அடக்கி பண்புகள் இருமலை குறைக்கும் மற்றும் சளி நீக்க பண்புகள் நெஞ்சில் உள்ள சளியை முறித்து எளிதில் வெளியேற்றிவிடும்
நுரையீரல் :-
தினமும் துளசி இலைகளை உட்கொண்டு வருவதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ஏனெனில் துளசியில் பாலிஃபீனால்கள் நுரையீரலில் நெரிசல்கள் ஏற்படுவதைத் தடுத்து, சீராக சுவாசிக்க உதவும்.
நோயெதிர்ப்பு சக்தி :-
துளசியில் உள்ள கிருமிநாசினி பண்புகள், பல்வேறு வைரஸ் தொற்றுக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும். மேலும் இதனை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமைப் பெறும். முக்கியமாக வாழும் வாழ்க்கையின் தரம் அதிகமாகும்

Friday 14 August 2015

நாடாப்புழு

உங்க வயிற்றில் வாடகை தராமல் குடியிருக்கும் கிருமிகளையும் நாடாப்புழுக்களை வெளியேற்ற‍ …

உங்க வயிற்றில் வாடகை தராமல் குடியிருக்கும் கிருமிகளையும் நாடாப் புழுக்களை ஒட்டுமொத்த‍மாக வெளியேற்றும் அதிரடிபடை ஒன்றுண்டு.

ஆம்! இந்த பூசணியின்தோலுடன், வெள்ளரி விதையையும் சேர்த்து பொடித்த பிறகு இவற் றுடன் பாலையும், சர்க்கரையையும் தேவை யான அளவு சேர்த்து குடியுங்கள். இதுதான் அந்த அதிரடி படை இதனை குடித்தால் உங்களது வயிற்றில் வாடகை தராமல் உங்களை ஏமாற்றி குடியிருக்கும் வயிற்று கிருமி களும், நாடாப்புழுக்களும் அலறி அடித்துக் கொண்டு மலம் வழியாக வெளியேறி விடும். நீங்களும் அதீத சுகம் காண்பீர்.


Tuesday 11 August 2015

சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து...!


►440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம். அவசியம் படிச்சி பார்த்துட்டு கண்டிப்பா செய்தும் பாருங்க
எனக்கு ...தெரிந்த உறவினர் ஒருவருக்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும்.
அதன் அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் , எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா.??? இருக்கிறது
எனக்கு தெரிந்தவருக்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி.!!?
எங்களது ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை அவர் தினமும் சாப்பிட்டு வந்தாங்க. அவருக்கு பலனாக சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது.
நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம்.
இதை எவ்வாறு பயன் படுத்துவது- இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம்.
பின் குறிப்பு:-
உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும்.
சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள். சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது.
Special Tips For Sugar Problem :
நூக்கல் 2 எடுத்து மிக்சியில் அரைத்து அதில் 5 ஆவாரம் பூக்களை அரைமணிநேரம் ஊரவைத்து குடிக்க வேண்டும்.
5 வெண்டைக்காய்களை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்.

தொப்பை குறைய எளிய பயிற்சி


தொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பயிற்சி உடனே பலன் தரக்கூடியவை. அவற்றில் இதுவும் மிக முக்கியமானது. இந்த பயிற்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்..முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுக்கவும்.
கைகளை மேல் நோக்கி வளைக்காமல் நேராக துக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் எழுந்து உட்காரவும். கைகள் முன்னோக்கி படத்தில் காட்டிய படி நீட்டியே இருக்க வேண்டும். கால்களை மடக்க கூடாது. இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 25 முறை செய்யவ...ும்.
பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முதல் 40 முறை செய்யலாம். எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சியை தொடர்ந்த 3 மாதம் செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

Monday 10 August 2015

வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கும் சுண்டைக்காய் - இயற்கை மருத்துவம்


சுண்டைக்காய் பெரியவகை செடி இனத்தை சேர்ந்தது. 5 முதல் 10 அடி உயரம் வரை வளரும். காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இதில் காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது.
ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ண...ெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது. சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இளம்வயதினரிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை போக்க சுண்டைக்காய் உதவும். குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்கவேண்டும். இதை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும். மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும்.
மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும். தவறான உணவுப் பழக்கம் காரணமாக பலர் வயிறு சம்பந்தபட்ட நோய்களால் துன்பப்படுகிறார்கள். அமீபியாஸ் என்ற வயிற்று நோயால் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மலச்சிக்கலும், அதிக மலப் போக்கும் மாறி மாறி தொந்தரவு செய்யும். புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளும் தோன்றும். இதனால் மனசோர்வு ஏற்படும். இத்தகைய நோயாளிகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.
சுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் தொல்லை தரும் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது. இதில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் உணவில் சுண்டைக்காயை அடிக்கடி பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்

Sunday 9 August 2015

மார்பக புற்றுநோய்


“புற்றுநோய்” என்று பெயர் வரக் காரணம் என்ன?
– எறும்பின் புற்று அடிப்பாகம் பெரிதாகவும், மேல் பாகம் கூர்மையாகவும், பல கிளைகளாக பரவியும் காணப்படும். அதன் ஓரங்களும் சீராக இருக்காது. புற்று நோயாளிகளின் பாதிக்கப்பட்ட உடல்பாகமும் அதுபோல் தெரிவதால் அதற்கு புற்றுநோய் என்று பெயரிட்டுவிட்டார்கள். ஆங்கிலத்தில் “கேன்சர்” என்று சொல்வார்கள். கேன்சர் என்ற வார்த்தை “கேன்கர்” என்ற சொல்லிருந்து வந்தது. கேன்கர் என்றால் நண்டு. நண்டின் உடல் நடுவிலும், அதன் கால்கள் பல கிளைகளாக ஓரங்களிலும் தெரிவதுபோல் புற்றுநோயின் பாதிப்பும் தெரிவதால், கேன்சர் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். யாருக்கும், உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். மார்பக புற்றுநோய், உலகில் இரண்டாவது பெரும் நோயாக குறிப்பிடப்படுகிறது.
புற்று நோய் ஏன் வருகிறது?
மனிதனின் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும் பொழுதோ அல்லது தேய்மானம் அடையும் பொழுதோ, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரையில்தான், மறுபடியும் பெருகும். இதை தீர்மானிப்பது ஒவ்வொரு செல்லிலும் உள்ள “நூக்லியஸ்” என்ற உயிர் பொருள். இது குறிப்பிட்ட அளவை விட மிக அதிகமான எண்ணிக்கையில், பெருகினால் புற்றுநோய் தோன்றும்.
மார்பக புற்று நோய், மார்பில் உள்ள பால் சுரப்பிகளில் ஏற்படலாம். பால்வரும் குழாய்களிலும் ஏற்படலாம். இந்த குழாய்கள் எல்லாம் சேர்ந்து மொட்டு மாதிரி தோன்றும் மார்பகக் காம்புகளிலும் வரலாம். ஒவ்வொரு பால் சுரப்பியையும் இணைக்கும் கொழுப்பு திசுக்களிலோ அல்லது மற்ற திசுக்களிலோகூட வரலாம்.
மார்பக புற்று நோய் மார்பில் மட்டும் இருப்பதில்லை. அவை அங்கிருந்து பரவி கீழே உள்ள நெஞ்சுக்கூட்டின் திசுக்களில் பரவும். அக்குள்களில் உள்ள நெறிக்கட்டிகளிலோ, இன்னொரு மார்பகத்திலோகூட பரவும். ரத்தத்தின் வழியாக எந்த உறுப்புகளுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். குறிப்பாக மூளை, சிறுநீரகங்கள் அதிகமாக தாக்கப்படுகின்றன. மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
பல காரணங்களை சொல்லலாம். பொதுவாக இது உடலில் உள்ள மரபணுக்களால்தான் (எக்ஙூக்ஞ்கூஷ ஊஹஷஞ்ச்சு) வருகிறது. 5 முதல் 10 விழுக்காடு தாய், தந்தையிடமிருந்து வரலாம். ஆதஇஅ-1 ஆதஇஅ-2 என்று இரண்டு மரபணுக்களை கண்டுபிடித்துள்ளனர். இது தாயிடமிருந்தோ அல்லது தந்தையிடமிருந்தோ வரலாம். ஒருவருடைய ரத்த சொந்தங்கள் யாருக்கேனும் மார்பக புற்று நோய் இருந்தால், அவருடைய அடுத்த தலைமுறை நபர்களுக்கும் இது வருவதற்கான வாய்ப்பு அதிகம். மது அருந்தும் மங்கையர்களையும், மாதவிடாய் நின்ற பிறகு உடல் பருமனாகிறவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்கும். உடலில் உள்ள கொழுப்பு திசுக்கள் “ஈஸ்ட்ரோஜன்” என்ற வேதிப் பொருளை சுரக்கின்றன. மாதவிடாய் நிலைத்துப்போகும் `மெனோபாஸ்’ காலத்தை பெண் அடைந்த பின்பு, உடலில் அதிகமாக இருக்கும் ஈஸ்ட்ரோஜன், மார்பக புற்று நோயை தோற்றுவிக்கலாம். புகை பிடித்தல், ஈஸ்ட்ரோஜன் அதிகமாக உள்ள மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவது, தவறான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, மன அழுத்தம், மன உளைச்சல், ஆகியவைகளும் மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்களாக அறியப்படுகின்றன.
உணவு வகைகளில் இன்னமும் தீர்மானமாகச் சொல்லப்படவில்லை என்றாலும் கொழுப்பு நிறைந்த சிவப்பு இறைச்சி, கொழுப்பு நிறைந்த பால், ஐஸ்கிரீம், பாலாடை கட்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வரலாம். சிறு வயதில் பூப்படைதல், மிகவும் தாமதமாக மெனோபாஸ் காலகட்டத்தை அடைதல் போன்றவையும் நோய்க் காரணங்களாக சொல்லப்படுகின்றன.
எந்த வயதில் இந்த நோய் அதிகம் தாக்கும்?
30 வயதிலிருந்து 39 வயது வரை 233 பேர்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வரலாம்.
40 வயதிலிருந்து 49 வயது வரை 69 பேர்களில் ஒருவருக்கும், 50 வயதிலிருந்து 59 வயது வரை 38 பேர்களில் ஒருவருக்கும், 60 வயதிலிருந்து 69 வயது வரை 27 பேர்களில் ஒருவருக்கும் மார்பக புற்று நோய் வரலாம். இதன் அறிகுறி என்ன?
முதலாவதாக தென்படுவது மார்பகத்தில் கட்டி. ஆரம்ப நாட்களில் வலி இல்லாமலும், அந்த கட்டியினுடைய ஓரங்கள் சீராக இல்லாமலும் இருக்கும். ஆனால் பல சமயங்களில் தொட்டாலோ அல்லது அழுத்தினாலோ வலி ஏற்படுகின்ற கட்டியாகத்தான் இது வருகிறது. மார்பகத் தோலில் எரிச்சல் அல்லது நமைச்சல் அல்லது ஆரஞ்சு பழத்தோலில் இருப்பது போன்ற புள்ளி புள்ளியாக குழிகள், மார்பக காம்புகளில் வலி, வீக்கம், காம்பை சுற்றியுள்ள தோலில் சுருக்கம், நமைச்சலுடன் கூடிய தேமல் போன்ற தோற்றம் எல்லாம் அறிகுறிகள். மார்பகக் காம்புகள் உள்ளிழுக்கப்பட்ட நிலை, சுரப்பிகள் வழியாக ரத்தமோ அல்லது திரவமோ கசிவது, அக்குகளில் நெறிக்கட்டிகள் வீங்கியிருப்பது போன்றவைகளும் அறிகுறிகள்தான்.
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்த பின்னர் பெண்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்யவேண்டும். ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தால், உடனே மருத்துவரின் பரிந்துரைப்படி `மாமோகிராம்’ முறையில் மார்பகத்தை படம்பிடித்து சோதித்துப் பார்க்க வேண்டும். கட்டிகள் இருப்பின் கட்டியை ஊசி மூலம் துளைத்து அதை பரிசோதிக்க வேண்டும். மார்பக காம்பிலிருந்து கசியும் திரவத்தை ஆராய்ந்து புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என்றும் கவனிக்க வேண்டும்.
மார்பக புற்றுநோய்க்கான தீர்வு என்ன?
வருமுன் காப்பது எளிது! வந்த பின்னர் மருத்துவரை உடனே பார்ப்பது நல்லது!
சிலருக்கு எளிமையான கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்தால் போதுமானது. சிலருக்கு மார்பகத்தை நீக்கிவிடுவார்கள். கூடவே கீழே உள்ள தசையையும், அக்குகளில் உள்ள நெறிக் கட்டிகளையும் சேர்த்து அப்புறப்படுத்துவார்கள். சிலருக்கு கதிர்வீச்சு வைத்தியம் தேவைப்படும். நோயை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மருந்து, மாத்திரைகள், ஊசிகள் தேவைப்படலாம். பல வைத்திய முறைகளில் குணப்படுத்தலாம். ஆனால் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை பார்க்க வேண்டும்.
இந்த நோய் வராமலே தடுக்க முடியுமா?
உடற்பயிற்சி தினமும் செய்தால் இந்த நோய் வரும் வாய்ப்பு குறையும். ஒரு நாளைக்கு 45 முதல் 60 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்பவர்களை பொதுவாக மார்பக புற்று நோய் தாக்குவதில்லை. கேரட், பீட்ரூட், தக்காளி, பூசணி, பரங்கிக்காய், ப்ராக்கோலி, கீரை வகைகளில் “கரடினாய்ட்ஸ்” என்ற வேதிப் பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய் வருவதை தடுக்கின்றது.
சிவப்பு திராட்சை, பெர்ரி, பீச், ஆப்பிள், வாழைப்பழம் (குறிப்பாக செவ்வாழை) போன்றவைகளை தினமும் சாப்பிடுபவர்களை மார்பக புற்றுநோய் தாக்கும்தன்மை குறைவு.
பிங்க் மாதமாகிய இந்த அக்டோபரில் ஒவ்வொரு பெண்ணும் `உடல் சுத்தம், மன சுத்தத்தோடு வாழ்வேன். உடற்பயிற்சி செய்வேன். நல்ல உணவுப் பழக்கத்தை மேற்கொள்வேன்’ என்ற உறுதிமொழியை எடுத்து, அதை கடைபிடித்தால் மார்பக புற்றுநோயின்றி வாழலாம். விளக்கம்: டாக்டர் அருணா ராமகிருஷ்ணன் (மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவ நிபுணர்) சென்னை – 41.
***
நோயின் பல நிலைகள்
நிலை `0′: புற்றுநோய் பால் குழாய்களில் மட்டும் இருக்கும். மார்பக திசுக்களில் பரவி இருக்காது.
நிலை 1: புற்றுநோய் 2 செ.மீ. அல்லது குறைவாக இருக்கும். மார்பகங்களில் மட்டும் இருக்கும். சிலருக்கு மார்பகங்களில் இருக்காது. அக்குகளில் உள்ள நெறிக்கட்டிகளில் இருக்கும்.
நிலை 2- அ புற்றுநோய் 2 செ.மீ., அளவில் அக்குளில் உள்ள நெறிக்கட்டிகளுடன் சேர்ந்து இருக்கும்.
நிலை 2- ஆ புற்று நோய் கட்டி 5 செ.மீ.க்கு பெரிதாகியிருக்கும். ஆனால் மற்ற இடங்களுக்கு பரவாமல் மார்பகத்தில் மட்டும் இருக்கும்.
நிலை 3- அ கட்டியின் அளவு பெரிதாக இருக்கும். எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.
நிலை 3- ஆ புற்று நோய் மார்பு எலும்பிற்கும் பரவி இருக்கும்.
நிலை 3- இ புற்று நோய் காலர் எலும்பின் கீழ் உள்ள நெறிக்கட்டிகளை தாக்கியிருக்கும்.
நிலை 4: புற்று நோய் மற்ற பாகங்களுக்கும், மற்ற உறுப்புகளுக்கும் பரவி இருக்கும்.
வர்மக்கலை's photo.

மூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து

மூல நோயால் அவதிப்படுபவர் என்ன உணவைச் சாப்பிடலாம் என்பது குறித்து டாக்டர் பி.எல்.டி.கிரிஜா விளக்குகிறார். மூல நோய் தீவிரமடைந்தால் மனிதரைக் கடுமையாக வாட்டும் வாய்வின் சீற்றத்தால் மூலம் ஏற்பட்டால் வயிறு உப்புசம், உடல் வலி அல்லது குத்து வலி, இருதயத்தில் படபடப்பு, மலச்சிக்கல், சிறுநீர் தடைபடுதல், வாய் சரியாக பிரியாமல் இருப்பது, தொடை, இடுப்பு, முதுகு, வயிறு, விலாப் பக்கங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் வலி, மூக்கில் சளி, தும்மல், ஏப்பம், தலைவலி, இருமல் வாய்வு மேல் நோக்கி செல்வது, நாக்கில் ருசியின்மை போன்ற தொல்லைகளும் சேர்ந்து காணப்படும்.
மூல நோயில் பித்தம் தீவிரமாக இருந்தால் இரத்தக் கசிவு, எரிச்சல், வீக்கம், வலி, காய்ச்சல், மயக்கம், பசியின்மை, மஞ்சள், பச்சை நிறத்தில் மலம் துர்நாற்றத்துடன் வெளியேறுவது போன்றவை ஏற்படும். கப தோஷத்தால் உருவாகும் மூல நோயில் முளைகள் வழவழப்பாக எண்ணெய்ப் பசையுடன் ஈரக்கசிவுடன் தோன்றும். இதில் வீக்கமும் நமைச்சலும் அதிகமாக ஏற்படும். கால் இடுக்குப் பகுதிகளில் வீக்கம், அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது காய்ச்சல் வாந்தி, வலி இவை நீண்ட நாட்கள் தொடர்ந்து துன்புறுத்தும்.
மூல நோயால் அவதிப்படும் நோயாளிகள் எளிதில் ஜீரணமாகும் வாய்வை சரியாக இயங்க வைக்கும் உணவு, பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். இதற்கு எதிர்மாறான எல்லா உணவுகளையும் பழக்க வழக்கங்களையும் தவிர்க்க வேண்டும். இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. மூல நோயின் வகைகளைப் பொறுத்து அவை மாறுபடும். “தக்ரப்ரயோகம்‘ எனப்படும் மோரைப் பயன்படுத்துவது சிறந்த சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறைப்படி நோயாளியின் உடல் நிலை நோயின் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு வாரத்திலிருந்து நோயை குணப்படுத்த மோரை விட சிறந்த உணவோ, மருந்தோ கிடையாது. ஜீரண சக்தி மிகவும் குன்றியிருக்கும் நிலையில் மோரை அருந்துவதால் ஜீரண சக்தி மேம்பட்டு நோயும் குணமாகும். ஜீரணக் கோளாறுகளுக்கு மோர் ஒரு அபூர்வ மருந்து. வயிற்வில் வாய்வு, கபம் இரண்டையும் போக்குகிறது.
இப்போதெல்லாம் தயிரைச் சிறிது குழப்பி விட்டு அது தான் மோர் என்று பலர் அருந்துகின்றனர். தயிரின் குணங்கள் மோரின் குணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
சிலர் தயிர் சரியாகத் தோய்வதற்கு முன்பே அதை உட்கொள்கின்றனர். இப்படி அரைகுறையாகத் தோய்ந்த தயிரை சாப்பிட்டால் பல நோய்கள் தோன்றும். சரியான மோரை அருந்த வேண்டும் என்றால் இரவில் பாலைத் தோய்த்து அதைக் காலையில் நன்றாகக் கடைந்து வெண்ணெய் பிரிந்து வந்த பிறகே மோரைப் பருக வேண்டும்.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.

Saturday 8 August 2015

தொண்டை புற்று நோய்

குருவின் அனுகிரத்துடன் இதை தொடரவும்
நொச்சி இலை கற்பூரம் நோலா தரைத்தடக்கின்
அச்சமில்லை தாள்புற்றுக் காற்று ......குறள்
விளக்கம்
தினமும் காலையில் நொச்சி இலை சிறிதும் பூகற்பூரம் இரண்டையும் தொண்டை புற்று நோய் உள்ளவர்கள் வாயில் உமிழ்நீரில் அடக்கி 10 முதல் 30 நிமிடம் வரை வைத்து வந்தால் புற்று நோய் விலகும்

பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..!

விசேட தகவல்கள்'s photo.


புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, பு...த்துணர்வு பெறவும் உதவுகிறது.
ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.
ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.
எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.
அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.
மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.

Friday 7 August 2015

பற்களை பாதுகாக்க எளிமையான பற்பொடி !!!


    பற்களை பாதுகாக்க எளிமையான மருந்து இன்றைய நவீன பற்பசை மற்றும் பற்பொடிகளில் சுவைக்காக அதிகமாக இரசாயனத்தை கலப்பதால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி மிகவும் மோசமான நோய்களுக்கு நாம் உள்ளாகலாம். நம் முன்னோர்கள் நமக்காக மிக சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து பல அறிய மருந்துகளை அளித்து சென்றுள்ளனர். அந்த வகையில் பற்களை பாதுகாக்க சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து ஒரு தரமான பற்பொடியை எப்படி நம் வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்போம்.
    கடுக்காய் பொடி... 100 கிராம் – நாட்டு மருந்து கடைகளில் பவுடராக வாங்கி கொள்ளவும்
    கிராம்பு 50 கிராம்
    கல் உப்பு 25 கிராம்

    இந்த கலைவையை அளவில் கூறவேண்டுமானால் ஒரு பங்கு கடுக்காய் அரை பங்கு கிராம்பு மற்றும் கால் பங்கு கல் உப்பு.
    மேற் சொன்ன பொருட்களில் கிராம்பு மற்றும் உப்பை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு அதில் கடுக்காய் பவுடரையும் கலந்து கொள்ளவும். இப்பொழுது உங்களுக்கான தரமான பற்பொடி தயாராகிவிட்டது. பல் சொத்தை உள்ளவர்கள் இதை பற்பொடியாக தினந்தோறும் பயன்படுத்தினால் பல் சொத்தை இருப்பதையே மறந்துவிடுவார்கள்.

உடல் எடையை குறைக்கும் சுக்கு சூப் ~~~!!!!



    காலையில் காபி, டீ இவற்றுக்குப் பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மலச்சிக்கலும் ஏற்படாது. சுக்கு சூப் செய்வது சுலபம்தான். அதிகளவு உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைவதை காணலாம்.
    ...
    தேவையான பொருட்கள் :
    சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன்
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பரங்கிக்காய் - சிறிய துண்டு
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    செய்முறை :
    • வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
    • சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும்.
    • வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    • ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய், சுக்கு, மிளகு போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.
    • தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
    • தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

இயற்கை வாய்ப்புண் டானிக் !!!


    இயற்கை வாய்ப்புண் டானிக்கோவைக்காய் ,கோவை இலை மற்றும் கோவை பூ இவை அனைத்தையும் ஒன்றாக ஓரு ஒருபாத்திரத்தில் எடுத்து அதில் தேவையான நீரை சேர்த்துக்கொள்ளவும் பிறகு அதை நன்றாக கொதிக்கவைக்க வேண்டும், கொதித்த பின் அதை வடிகட்டியால் வடிகட்டி நீரைமட்டும் எடுத்து சேகரித்து கொள்ளுங்கள். சுவைக்காக சிறிது தேனை சேர்த்துக்கொள்ளுங்கள். தேன் இல்லாதபட்சத்தில் சர்கரையை சேர்த்துக்கொள்ளலாம். இப்பொழுது வாய்ப்புண் டானிக் தயார். இதை சித்த வைத்தியத்தில் தீநீர் இறக்குவது என்ற...ு கூறுவார்கள்.
    இந்த தீநீர் வயிற்றுப்புண் , வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக சிறந்த டானிக்காகும். சில நேரங்களில் மற்ற நோயின் காரணமாக மருந்துகளை சாப்பிடுவதால் அலர்ஜி அல்லது வேறு சில காரணங்களால் நம் வாய் வெந்துபோய்விடும், அந்த சமயங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
    தகவல் ஜீ தமிழ் பாரம்பரிய மருத்துவம்.
    மேலே குறிப்பிட்ட தீநீர் செய்ய முடியவில்லை என்றாலும் கவலை இல்லை. கோவைக்காய் வெறும் பச்சையாகவே சாப்பிட்டாலேபோதும் வாய்ப்புண் விரைவில் குணமடையும். கோவை காயை பச்சையாக சாப்பிடுவதா என்று எண்ணவேண்டாம். கோவைக்காய் பச்சையாக சாப்பிட்டால் அசல் வெள்ளரி பிஞ்சு சுவையுடையது.
    Baskar Jayaraman's photo.

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப்... பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
1. தலை 307
2. வாய் 18
3. மூக்கு 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல்உறுப்பு எங்கும் 3100
ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.
உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.
கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்
குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.
கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்
குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.
குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.
கிருமிகள் உருவாகக் காரணம்
கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.
அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.
நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.
கண் நோய் :
கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.
பொதுக் காரணங்கள் :
வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.
சிறப்புக் காரணம் :
சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.
காசநோய் :
கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.
வெள்ளெழுத்து
கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.
முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.
கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.
தலைநோய் :
உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.
கபால நோயின் வகை :
வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.
தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.
அம்மை நோய் :
அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.
மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.
அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.
இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.
அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.
சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,
1. பனை முகரி 2. பாலம்மை
3. மிளகம்மை 4. வரகுதரியம்மை
5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை
7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை
9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை
11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை
13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை
என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.
ஆண், பெண், அலியாவது ஏன்?
"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(திருமந்திரம் 480)
ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.
குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)
அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.
கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?
"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(திருமந்திரம் 481)
சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்

Tuesday 4 August 2015

நாக்கு

ஆயுர்வேதம் &  சித்த மருத்துவம்.'s photo.
அது போல் நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் உடலின் நிலையை உணர்த்தும்.
கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.
மஞ்சள் ...நிறம் கல்லீரல் பாதிப்பையும்,
பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்,
வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி),
நீல நிறம் இதய கோளாறு,
பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,
நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் படவில்லை என்றும்,
நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும்,
நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று பொருள்.
கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.
இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்

பாட்டி வைத்தியம்:-

* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்....

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
தினமும் இரவில் பேரிச்சம்பழத்தை பாலில் வேகவைத்து சாப்பிடுங்கள். அல்லது கொய்யாப்பழம் சாப்பிட்டு பால் அருந்துங்கள். மலச்சிக்கல் உடனே தீரும்.

* பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் சருமத்தில் பளபளப்பும் கண் பார்வையில் தெளிவும் உண்டாகும்....

* தட்டைப் பயறு வேக வைத்த நீரை சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான அனைத்து வியாதிகளும் குணமாகும்.

* வெள்ளாட்டுப் பாலுடன் மணத்தக்காளிக்கீரையை அரைத்து கலந்து 4 தினங்கள் சாப்பிட்டால் அல்சர் சம்பந்தமான வயிற்றுவலி வராது.

* சிவந்த மாவிலைத் தளிர்களை பச்சையாகச் சாப்பிட குரல் இனிமை பெறும்.




* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்­ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.


* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்....

* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.

* காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.

* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

* கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.
*தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்....
* வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.
*மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.
*சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.
*துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.
*கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்..



மாதுளைப்பூ

எல்லா வகையான பூக்களுக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.. பொதுவாக மாதுளை என்றதும் பலருக்கு ஞாபகத்துக்கு வருவது மாதுளை பழம் தான். நாம் உண்னும் மாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளை பூவும் சத்துகளை கொண்டுள்ளது. இரத்த மூலத்திற்கும், இரத்த பேதிக்கும் மாதுளம் பூ மிகச் சிறந்த மருந்து பொருள்.

உலர்ந்த மாதுளைப்பூவை முப்பது கிராம் எடுத்து சேகரித்து பதினைந்து கிராம் வேலம் பிசின், மூடுன்று அரிசி எடை அபின் ஆகிய மூன்றையும் சேர்த்து சூரணமாக்கி ஒரு வேளைக்கு ஆறு குன்றிமணி எடை வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம், இரத்த பேதி முதலியன குணமாகும். உலர்ந்த மாதுளை மொக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கடுமையான இருமல் தோன்றினால் ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்தினால் உடனே குணம் தெரியும். ...

உலர்ந்த மாதுளைப்பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சீக்கிரமாக சரியாகிவிடும். ரத்த பேதிக்கும் இதே முறையில் கொடுக்க குணம் தெரியும். சீரகத்தோடு உலர்ந்த மாதுளைப்பூவைச் சேர்த்து மண் சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து கொள்ள வேண்டும். இதனை இடித்து நன்கு தூளாக்கி வஸ்திர காயம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் மூலவாயு மாறும் உஷ்ணத்தில் தோன்றக்கூடிய பேதியும் குணமாகும்.

ஆரோக்கியமான உடல் நலம் பெற விரும்புபவர்கள் மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து ஆரோக்கிய உடல் கிடைக்கும். சிலருக்கு வயிற்றில் வாயுக்களின் சீற்றத்தால் சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போல் காணப்படும். பசி என்பதே இவர்களுக்கு தோன்றாது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் வாயுக்கள் சீற்றம் குறையும்.

கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். மாதவிலக்கு நிற்கும் காலமான மொனோபாஸ் காலத்தில்பெண்களுக்கு அதிகமான மன உளைச்சல் உண்டாகும். கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி உண்டாகும். இவர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இப்பிரச்சனை நீங்கும். அதுபோல வெள்ளை படுதலும் குணமாகும்

பொடுகை விரட்ட வேப்பம்பூ --- இயற்கை மருத்துவம்:-



பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

பிரண்டை சூப்

உடல் ஆரோக்கியத்திற்கு நம் முன்னோர் பின்பற்றிய முறைக்கு பலர் மாறத்துவங்கியுள்ளனர். இதனால் தான் சிறுதானியங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தோட்...டம், வீடுகளில் வளர்க்க கூடிய மூலிகை செடிகளை பயன்படுத்தி வெஜ் சூப், ஜூஸ் என தயார் செய்து குடிக்கவும் துவங்கிவிட்டனர். குறைந்த செலவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் ஜூஸ், சூப் ஆகியவற்றை வீட்டிலேயே தயார் செய்து அருந்தலாம்.
இதற்கான வழிமுறையாக ‘பிரண்டை சூப்’ தயார் செய்யும் விதம் குறித்து சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த ஏ.பாக்கியவதி விளக்கினார்.
அவர் கூறியதாவது:
பிரண்டை செடி தோட்ட வேலிகளிலும், பலர் வீடுகளிலும் வளர்த்து வருகின்றனர். மருத்துவ குணம் வாய்ந்த பிரண்டையை உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை. பிரண்டையை துவையல் ஆகவும், சூப் ஆகவும் தயார் செய்து பயன்படுத்தலாம். இளம் பிரண்டையை கை பிடி அளவு எடுத்து தேவையான அளவில் ஒடித்து, அதன் மேல் உள்ள தோல் பகுதியை நீக்கி, சதைப்பகுதியை தனியாக எடுத்து கொள்ளவேண்டும்.
வெண்ணெய் அல்லது நெய் ஒரு ஸ்பூன் விட்டு சிறிதளவு சீரகத்தை வதக்கிக்கொள்ளவேண்டும். பின் பிரண்டையுடன் மூன்று சிறுவெங்காயம், மூன்று பூண்டு, ஒரு தக்காளி சேர்த்து வதக்கவேண்டும். அதன்பின் சிறிது துவரம் பருப்பு, தேவையான அளவு தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும். நன்கு வெந்த பிறகு சக்கையை நீக்கி விட்டு சாறு எடுத்து கொள்ள வேண்டும். அதன் பின்
பிரியாணி இலை, இரண்டு கிராம்பு சேர்த்து இதமாக சூடு ஏற்படுத்தி நுரை வந்தவுடன் இறக்கினால் பிரண்டை சூப் ரெடி.
குடிப்பதற்கு முன் மிளகு துõள்
சிறிதளவு சேர்த்து கொள்ளலாம். உடல் வலி, வயிற்றுபுண், மூலத்திற்கும் பயன் உள்ள மருந்தாகவும் பிரண்டை சூப் உள்ளது, என்றார்.