தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Saturday 16 May 2015

பெண்கள்... வழுக்கை... தேரையரின் தீர்வு!


முடி உதிர்வது பற்றிய கவலை அநேகமாய் எல்லாப் பெண்களுக்குமே உண்டு. இது தவிர்க்க முடியாதது. இதற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு காரணங்கள் உண்டு. பெரும்பாலும் பொட்டு, பொடுகு ஏற்படுவதன் மூலமே அதிகமாய் முடி உதிர்கிறது.
டைபாயிடு சுரம் எனப்படும் பித்த கபவாத சுரம் வந்து குணமான பின்னரும் பெரிய அளவில் முடி உதிரும். இதனால் அக்காலத்தில் பித்தகபவாத சுரம் வந்து குணமான உடன் மொட்டை அடிக்கும் பழக்கமும் இருந்தது. மொட்டை அடித்தால் மட்டுமே கருகரு...வென புது முடி வளருமாம். இல்லையேல் ஆங்காங்கே முடிஉதிர்ந்து திட்டுத்திட்டாய் வழுக்கையாகி விடுமாம்.
இப்படி முடி கொட்டி வழுக்கைத் தோற்றமுள்ள பெண்களுக்கான தீர்வு ஒன்றினை....
இப்படி முடி கொட்டி வழுக்கைத் தோற்றமுள்ள பெண்களுக்கான தீர்வு ஒன்றினை தேரையர் தனது “தேரையர் வைத்திய காவியம்” என்னும் நூலில் அருளியிருக்கிறார்.
காரு நாய் கரிச்சான்பட்டை யார்பலம்
பாரு பேருறை யார்பலம் வெள்ளுள்ளிச்
சேரு வாய்பலஞ் சேர்த்து நறுக்கியே
ஏரு வாய் நாழி யெள்ளெண்ணே யூற்றிடே.
ஊர்த்திடுங் கதிரோன் புட மேனிதம்
போர்த்திடு மிரு போதுமோ ரேழுநாள்
சேர்த்திடு மயிர் சேர முளைத்திடு
மேர்த்திடும் பத்திய மில்லைக் கார்த்திடே.
நாய் கரிச்சான் பட்டை ஆறுபலம், பேருறை ஆறுபலம், வெள்ளுள்ளி ஒருபலம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நறுக்கி ஒருபாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு நாழி அளவு எள்ளெண்ணெய் அதில் சேர்க்கவேண்டுமாம் (ஒரு பலம் என்பது முப்பத்தி ஐந்து கிராம் ஆகும்).
பின்னர் எள்ளெண்ணையுடன் மருந்துகளை வெயிலில் வைத்து சூரியப் புடமிட்டு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டுமாம். இப்படி சேகரித்த இந்த தைலத்தை வழுக்கையான இடத்தில் காலை, மாலை என இரு வேளையாக, ஏழு நாள் வரை தேய்த்து வர அந்த இடத்தில் புதிய முடி முளைக்கும் என்கிறார்.
இதற்கு பத்தியம் எதுவும் சொல்லப் படவில்லை. இந்த சரக்குகள் எல்லாம் தற்போது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. விலையும் குறைவுதான். வீட்டிலேயே நாம் தயாரித்துக் கொள்ள முடியும். தேவையுள்ளோர் தகுதியுள்ள சித்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று பயன்படுத்திடலாம்.
இந்த முறையில் ஆண்களின் வழுக்கைத் தலையில் முடி வளரவைக்க முடியுமா என்பது தெரியவில்லை ஆர்வமுள்ளோர் இந்த திசையில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளலாமே!.

No comments:

Post a Comment